திருவாரூர்

தேசிய அஞ்சல் வார விழா

DIN

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில், தேசிய அஞ்சலக வார விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அஞ்சல் அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க் காவலன் பங்கேற்று, அஞ்சல்துறையின் நிலை குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில், அஞ்சல் துறையின் காப்பீட்டுத் திட்டங்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டம், நிரந்தர வைப்புத் திட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT