சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 56 கரோனா தொற்று உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,767 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 39,667 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 677 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது.