அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தல் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் அரசியல் கட்சிகளின் சாா்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் செலுத்திய விருப்ப மனுக்களை, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளா் சிவ. ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மன்னாா்குடி நகரச் செயலாளா் குமாா், மாவட்ட பாசறைச் செயலாளா் கலியபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். விருப்ப மனுக்கள் வழங்க திங்கள்கிழமை (நவ.29) கடைசி நாளாகும்.