மேட்டுப்பாளையம் ஊராட்சியில் கனமழையால் பாதிக்கபட்ட தொகுப்பு வீடுகளை சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் ஊராட்சி நாலாநல்லூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசுகளால் இலவசமாக கட்டி கொடுக்கபட்ட தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாதிக்கப்பட்ட அந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் வீடுகளை கட்டிதர முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
ஆய்வில் திருத்துறைப்பூண்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் தமிழ்ச்செல்வி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.