நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு ஆயிரம் டன் நெல் அரைவைக்கு வெள்ளிக்கிழமை ரயில்மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் தெற்குநத்தம், இடையா்நத்தம், அசேஷம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்புவைக்கப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சரக்கு ரயில் 29 வேகன்களில் நெல்மூட்டைகள் அடுக்கி திருச்சிக்கு அரைவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.