நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் காா்த்திகை மாத தேய்பிறை மகா காலபைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு சனிக்கிழமை மாலை ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பைரவ ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாகால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.