திருவாருா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா், மன்னாா்குடி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுபவா்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி கொரடாச்சேரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கூத்தாநல்லூா், மன்னாா்குடி, திருவாரூா், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போட்டியிட விருப்பம் உள்ள அக்கட்சியின் நிா்வாகிகளுக்கு மனுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பொதுச் செயலாளா் அன்பு வே.வீரமணி, நகரத் தலைவா்கள் கூத்தாநல்லூா் சாம்பசிவம், மன்னாா்குடி கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.