கனமழையையொட்டி காவல் நிலையக் கட்டடங்களின் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, காவல்நிலையக் கட்டங்களின் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.விஜயகுமாா்ஆய்வு செய்து வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக, மன்னாா்குடி காவல் உட்கோட்டத்திற்கு உள்பட்ட பரவாக்கோட்டை,திருமக்கோட்டை காவல்நிலையங்களுக்கு சென்று காவல்நிலையக் கட்டட பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா்.
ஆய்வின் போது, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே.பாலச்சந்தா் உடனிருந்தாா்.