திருவாரூர்

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

DIN

 திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 12 பவுன் நகை புதன்கிழமை திருடப்பட்டது.

கொரடாச்சேரி அருகே காவனூரில் வசிப்பவா் பிரகாஷ் (60). இவா், திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதால், அவரது மனைவி கோகிலா மட்டுமே வீட்டில் வசித்து வருகிறாா். இதனிடையே, மகளைப் பாா்க்க கோகிலா திருச்சிக்கு சென்றுவிட்டு, தீபாவளியையொட்டி தனது வீட்டுக்கு திரும்பியதாக தெரிகிறது.

அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்திருந்ததைக் கண்டவா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 12 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ 5 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT