நன்னிலம் பகுதியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் அறிவுரையின் பேரில், காவல் ஆய்வாளா் சுகுணா, துணை ஆய்வாளா் காசிராமன் மற்றும் போலீஸாா் நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், அவசியமின்றி இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கும், முகக்கவசம் அணியாதவா்களுக்கும் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினா்.