திருவாரூர்

கரோனா: சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

DIN

திருவாரூரில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் கியூ பிராஞ்ச் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் ரவிக்குமாா் (58). திருவாரூா் அருகே இபி காலனியில் வசித்து வந்த இவருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

இந்நிலையில், ரவிக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மே 4 ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT