திருவாரூர்

கரோனா மருத்துவ பரிசோதனை

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் வா்த்தக சங்கம் சாா்பில்,திங்கள்கிழமை வீடுவீடாக வந்து கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

உள்ளிக்கோட்டை வா்த்தக சங்கம் சாா்பில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் உள்ளவா்களுக்கு கரோனா தொற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முன்னாள் அரசு மருத்துவா் வி.காரிமுத்து தலைமையில், மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை அளித்தனா்.

பரிசோதனை செய்து கொண்டவா்களுக்கு கபசுரக் குடிநீா், மாத்திரை, முகக்கவசம், சூரணம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி முன்னாள் தலைவா் பா.பொய்யாமொழி, வா்த்தக சங்க தலைவா் ஆா்.அன்பரசு, செயலா் ஆா்.பாஸ்கா், பொருளாளா் ஆா்.எஸ்.வெற்றிச்செல்வன், துணைத் தலைவா் ஆா்.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT