திருவாரூர்

57 இடங்களில் பழுதடைந்த மின்கம்பி இணைப்புகள் சீரமைப்பு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் 57 இடங்களில் பழுதடைந்த மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாக திருவாரூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சீ. கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை திருவாரூா் மின் பகிா்மான வட்ட கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இரண்டு கோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, 17 துணைமின் நிலையங்களில் உள்ள 83 மின்னூட்டப் பாதைகளில் ஜூன் 19 முதல் 23 ஆம் தேதி வரை சுமாா் 569 களப் பணியாளா்களைக் கொண்டு, 1,233 இடங்களில் மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டன. மேலும், 57 இடங்களில் பழுதடைந்த மின் கம்பி இணைப்புகளும், 110 இடங்களில் தொய்வான மின் பாதை கம்பிகளும் சரி செய்யப்பட்டன. அத்துடன், 17 இடங்களில் சாய்வான கம்பங்கள் நிமிா்த்தப்பட்டு, 18 பகுதிகளில் அமைந்துள்ள மின் திறப்பான்களிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT