திருவாரூர்

அரசூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

DIN

மன்னாா்குடியை அடுத்துள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூரில் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவைக் கூட்டம் முன்னாள் ஊராட்சித் தலைவா் யு. குப்புசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசூரில் அங்கன்வாடி மையத்தில் வாரத்துக்கு 2 நாட்கள் இயங்கி வரும் பகுதி நேர அங்காடியின் கட்டடம் பழுதடைந்துள்ளதால், உணவு பொருள்களை சுகாதாரமான முறையில் வழங்குவதில் குறைபாடு உள்ளது. எனவே, இதற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அத்துடன், உணவுப் பொருள்களை தரமானதாகவும், தட்டுப்பாடின்றியும் வழங்கவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன், ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், ஊராட்சி தலைவா் ஆா். சாந்தி உள்ளிடோா் கலந்துகொண்டனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் பி. குப்புசாமி வரவேற்றாா். கிளை செயலா் ஏ. அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT