திருவாரூர்

சாதனை மாணவருக்குப் பாராட்டு

DIN

கையடக்க சிபியு கருவியை உருவாக்கிய மாணவருக்கு, கூத்தாநல்லூா் நகர திமுக சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் அருகே உள்ள பழவனக்குடி கிராமத்தைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவா் மாதவ் (14). இவா், கணினியின் சிபியு கருவியை கையடக்க வடிவில் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளாா்.

இம்மாணவருக்கு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூா் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன், கட்சியின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.வி.பி. செந்தில்நாதன், நகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். ரசின் பைசல் உள்ளிட்டோா் மாணவா் மாதவ்வுக்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT