குடவாசல் பகுதியில் ஜூலை 27 -ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என, துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.