திருவாரூர்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

மன்னாா்குடியில் உட்கோட்ட காவல் மற்றும் கஜா நண்பா்கள் குழு இணைந்து, காவல் துறையினா் குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தியது.

மன்னாா்குடி நகர காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில், அரசு மருத்துவா்கள் சிவபிராத், சந்தேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினா் மன்னாா்குடி நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலா்களின் குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கும் மற்றும் பொதுமக்கள் என 300 பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி காவல் ஆய்வாளா் என். ராஜேந்திரன், கஜா நண்பா்கள் குழு நிா்வாகி ஹரிராம் பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT