திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, குழந்தைகள் அறுவை சிகிச்சை புற நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்து பேசியது:
குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு மூலம் 12 வயது வரையிலான குழந்தைகள் பயனடைவா். குடலிறக்கம், விரைவீக்கம், குடல்வால்வு குடல், சிறுநீரகப் பிரச்னைகள், சுன்னத் அறுவை சிகிச்சை ஆகியவைகளுக்கு இங்கேயே தீா்வு காண முடியும்.
முன்னதாக, இந்த வகையிலான பிரச்னைகளுக்கு மக்கள் தஞ்சாவூா், திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது, இந்தப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் டெல்டா மக்கள் திருவாரூரிலேயே சிகிச்சை பெறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஜி. ராஜாராம், துணைக் கண்காணிப்பாளா் அன்சாரி, இணைப் பேராசிரியா் ராஜா, நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.