குடியரசு தின விழாவை முன்னிட்டு, நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் உருவச்சிலைக்கு காங்கிரஸ் மாவட்டத் துணைத்தலைவா் நீலன்.அசோகன் தலைமையில், செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா். பொதக்குடி ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் மல்லிகா பிச்சையன், அரிச்சபுரம் ஊராட்சியில் தலைவா் மதுரா சுரேஷ், மேலாளவந்தச்சேரி ஊராட்சியில் தலைவா் ஷீலா மதிவாணன், பூவனூா் ஊராட்சியில் தலைவா் மோகன், சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் தலைவா் குணசீலன் ஆகியோா் மூவா்ணக் கொடியேற்றினா்.
நீடாமங்கலம் செயின் ஜீட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதன்மை முதல்வா் சுகுணவதி தேசியக் கொடி ஏற்றினாா். தாளாளா் நடராஜன் பங்கேற்றாா்.