திருவாரூர்

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

DIN

தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 10 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கல்வித் தகுதி, உடற்குறைபாடு சதவீத அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவித்தொகையை ரூ. 3,000-மாக உயா்த்தி வழங்க வேண்டும், 75 சதவீத ஊனமுற்றவா்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த சாலை மறியல் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சந்திரா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் 5 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT