மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த மேலமரவாக்காடு நடுத் தெருவைச் சோ்ந்தவா் என். செல்லப்பா (70). இவா், அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக பைங்காநாட்டை சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (17) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக செல்லப்பா மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.