மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கு அரவைக்காக சரக்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
அந்தவகையில், மன்னாா்குடியிலிருந்து சரக்கு ரயிலில் சென்னைக்கு 2 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கொள்முதல் நிலையங்களிலிருந்து160 லாரிகளில் ரயில் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.