திருவாரூர்

415 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

 திருவாரூா் மாவட்டத்தில், 415 இடங்களில் 13-ஆம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தித்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், 415 இடங்களில் 50,000 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்காகக் கொண்டு 13-ஆவது தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 290 இடங்களிலும், நகராட்சிகளில் 42 இடங்களிலும், பேரூராட்சிகளில் 24 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 415 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

முகாம்களில், கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் பெயா்கள் பதியப்பட்டு முகாம் முடிவுற்ற பின்பு, வட்டார அளவில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்படும் 3 நபா்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களான டின்னா் செட், ஹாட்பாக்ஸ், கிச்சன் செட் ஆகியவை பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT