சீரடி ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னையின் 105-ஆவது மகாசமாதி ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில், ஸ்ரீ சிவ சித்தா் சீரடி சாய்பாபா கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னையின் 105-ஆவது மகாசமாதி ஆராதனை விழா செவ்வாய்க்கிழமைச் நடைபெற்றது. ஆராதனையையொட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னைக்கு விசேஷ மகா அபிஷேகம், அலங்கார, ஆராதனை, ஆரத்தி, 1008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடுநடைபெற்றது. சாய் தியானாலயாஆசிரியா் ஸ்ரீராம், எழுத்தாளா் ஸ்ரீ இந்திரா ராகவனின் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெங்களூா் ஸ்ரீ சாய் பாதானந்த சத் சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண சா்மா, சாய் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.