விளக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா, இராயநல்லூா் கிளை சாா்பில் 28-ஆவது கிளை மாநாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஜோசப் தலைமை வகித்தாா். கிளை செயலாளா் ராகவன், நிா்வாகிகள் சுப்பிரமணியன், கருணாநிதி, சுஜாதா, குருமணி, பிரேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் இராயநல்லூரில் நடைபாலத்தை கான்க்ரீட் பாலமாக மாற்ற வேண்டும், மோசமான நிலையில் உள்ள பழைய கான்கிரீட் வீடுகளை நீக்கிவிட்டு புதிதாக கான்கிரீட் வீடுகள், சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.