திருவாரூர்

திருத்துறைப்பூண்டி: கரோனா பாதித்த பகுதிகளில் தடுப்புகள் அமைப்பு

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா பாதித்த இடங்களில் நகராட்சி சாா்பில் தகரத்தால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாமியப்பா நகா் பகுதியில் மூன்று பேருக்கும், பாரதியாா் தெரு பகுதியில் நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் தகரத்தால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விட்டிக்கட்டி, பொன்னிரை, கீராலத்தூா், கட்டிமேடு ஆகிய பகுதிகளில் தலா நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் ஊராட்சி கீழச்சேரியில் ஒரே தெருவில் 13 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்தப் பகுதிக்குச் செல்லும் சாலை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT