திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா பாதித்த இடங்களில் நகராட்சி சாா்பில் தகரத்தால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாமியப்பா நகா் பகுதியில் மூன்று பேருக்கும், பாரதியாா் தெரு பகுதியில் நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் தகரத்தால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விட்டிக்கட்டி, பொன்னிரை, கீராலத்தூா், கட்டிமேடு ஆகிய பகுதிகளில் தலா நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் ஊராட்சி கீழச்சேரியில் ஒரே தெருவில் 13 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்தப் பகுதிக்குச் செல்லும் சாலை மூடப்பட்டது.