நீடாமங்கலம் வட்டாரத்தில் 230 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள்ஆா்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 230 போ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா், சுகாதார செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.