நன்னிலம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.
இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் தியாகு. ரஜினிகாந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.