திருவாரூரில் டிராக்டா் மோதி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.
திருவாரூா் அருகே காமாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் விநாயக் (4). பவித்திரமாணிக்கம் தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்த விநாயக் தனது வீட்டருகே செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டா் மோதியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த விநாயக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.