திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கிளையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொது மேலாளா் மாரியப்பன் தலைமையில் நடந்த முகாமில் கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநா் பொன்முடி அறிவுறுத்தலின்படி, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்கள் மற்றும் அலுவலா்களுக்கும் மிளகு, சீரகம் கலந்த கஷாயம் வழங்கப்பட்டது.
இதில், நாகை மண்டல உதவி மேலாளா் திருமறைநாதன், கிளை மேலாளா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.