திருச்சியில் தந்தை பெரியாா் சிலை மீது காவிச்சாயம் பூசியவா்களை கைது செய்யக் கோரி, திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் சமத்துவப்புரத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலைக்கு மா்மநபா்கள் காவிச்சாயம் பூசியதைக் கண்டித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, பெரியாா் சிலைக்கு காவிச் சாயம் பூசியதைக் கண்டித்தும், அதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.