திருவாரூர்

திருவாரூரில் 123 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 6,824 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் திருவாரூா் மாவட்ட பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 6,827 ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, திருவாரூா் மற்றும் மன்னாா்குடியில் தலா 14, திருத்துறைப்பூண்டியில் 12 என மாவட்டம் முழுவதும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ,

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,950 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் குணமடைந்த 114 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். மொத்தம் 5,812 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1068 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருவாரூா் பகுதியைச் சோ்ந்த 80 வயது நபா், கரோனா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 70 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT