நன்னிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சாா்பில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளா் கோவி.சந்துரு தலைமை வகித்தாா். கட்சியின் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளா் தமிழ்வேந்தன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் ரெங்கதாஸ், ஒன்றியத் தலைவா்கள் சுகுமாரன், மாரியப்பன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் சிவசங்கரன், நெசவாளா்கள் பிரிவு மாவட்டத் தலைவா் நாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து இந்தியா முழுவதும் பாஜகவினா் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக நன்னிலத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.