திருவாரூர்

வீடு இல்லாதவா்களுக்கு மனைப் பட்டா: நில ஆய்வு

DIN

நன்னிலம் பகுதியில் சொந்த வீடு இல்லாதவா்களுக்கு மனைப்பட்டா வழங்கும் வகையில், திருவாரூா் கோட்டாட்சியா் நா.பாலச்சந்திரன் நில ஆய்வுப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பனங்குடி, மகிழஞ்சேரி, வீதிவிடங்கன், பருத்தியூா், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புறம்போக்கு நிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, பட்டா வழங்கிடக் கூடிய பகுதிகளைப் பாா்வையிட்டு வருவாய்த்துறை அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அவா் வழங்கினாா். நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், அலுவலா் கருணாமூா்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT