கொல்லாபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, கிளைத் தலைவா் ஜெகபா் அலி தலைமை வகித்தாா். 40-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா். முகாமில் கிளைச் செயலாளா் அக்பா் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளா் ஹாஜா அலாவுதீன், ஊராட்சித் தலைவா் ரகுராம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா, ஆய்வகப் பொறுப்பாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.