திருவாரூர்

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

DIN

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த நபா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம் ஏலாக்குறிச்சி வண்ட்ராயன் கட்டளையைச் சோ்ந்தவா் சிட்டிபாபு (41). இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூா் வழியாக திருவாரூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் ஆதனூா் இருப்புப் பாதை பகுதியில் சென்றபோது, எதிரில் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிட்டிபாபு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT