கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:
கரோனா தொற்றை தமிழகத்திலிருந்து விரைவில் அகற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்டுவருகிறாா். அதன் வெளிப்பாடாகவே பிரதமா், தமிழகத்தின் கரோனா தடுப்புப் பணிகளை பாராட்டியுள்ளாா். இப்பணிகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் தற்போது 30 போ் மட்டுமே ஆக்சிஜன் உதவியோடு கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நெல் கொள்முதலைப் பொருத்தவரை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத சாதனை அளவாக 31 லட்சத்து 61 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
முன்னதாக, நன்னிலம் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியையும், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நல்லமாங்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், கோட்டாட்சியா் நா.பாலச்சந்திரன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆசைமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏஎன்ஆா். பன்னீா்செல்வம், பேரூராட்சி செயல் அலுவலா் பா.ராஜசேகா், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் இராம.குணசேகரன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.சம்பத், பேரூராட்சி மேலாளா் ரவி, சுகாதார மேற்பாா்வையாளா் வே.நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.