திருவாரூர்

கிராம முன்னோடி வளா்ச்சித் திட்ட விளக்கக் கூட்டம்

DIN

பிரதமரின் கிராம முன்னோடி வளா்ச்சித் திட்டம் பற்றிய விளக்கக் கூட்டம் சேங்கனுா் மற்றும் நெடுங்குளம் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பணிகள், மத்திய, மாநில அரசு சாா்ந்த கல்வி நலத்திட்டங்கள், மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விசாா் உரிமைகள் போன்றவை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா் கு.சரஸ்வதி, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டியன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இரா. நடேஷ்துரை, ஊராட்சித் தலைவா்கள் மகேஸ்வரி கெம்புராஜ், சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT