திருவாரூா் மாவட்ட ஆட்சியரக பேருந்து நிறுத்தம் அருகே பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
திருவாரூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் அளித்த கோரிக்கை மனு விவரம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிலையத்தையே பயன்படுத்துகின்றனா். இங்கு பேருந்துக்காக ஆண்களும், பெண்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனா். அந்த இடத்தில் பொதுக் கழிப்பிடம் இல்லாததால், பெண்கள் அவதிப்படுகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பொது கழிப்பிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்த நிழற்குடை, பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிரந்த நிழல்கூடம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, ஊடக மையம் மாவட்ட துணை அமைப்பாளா் ரகுவரன், நன்னிலம் ஒன்றிய துணைச் செயலாளா் ரகு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர அமைப்பாளா் கபிலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.