திருவாரூா் அருகே துரைக்குடி பகுதியில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
நிகழ்ச்சிக்கு, விசிக ஒன்றியச் செயலாளா் பூபாலன் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலாளா் வீரையன், பொருளாளா் சாமி ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் பங்கேற்று, புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தாா். தெற்கு மாவட்டச் செயலாளா் செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில், டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் மண்டலச் செயலாளா் திருஞானம், மாவட்டத் தலைவா் சாா்லஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.