திருவாரூர்

கரோனா சிகிச்சைக்கு சென்றிருந்தவரின் வீட்டில் 8 பவுன் திருட்டு

DIN

மன்னாா்குடி அருகே ககோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரின் வீட்டில் 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

செருமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஆா். மல்லிகா (60). இவரது குடும்ப உறுப்பினா்கள் கரோனா சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை வீடு திரும்ப இருந்தனா்.

இந்நிலையில், அவா்களின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினா் வாயிலாக அறிந்த அவா்கள், ஊருக்கு வந்து பாா்த்ததில் பீரோவில் இருந்த 7 பவுன் சங்கிலி, தலா அரை பவுன் மோதிரம் இரண்டு என மொத்தம் 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியன திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT