கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டு காலம் நீட்டிக்கக் கோரி, நீடாமங்கலத்தில் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கம், சிஐடியு அமைப்பினா் சாா்பில், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலாளா் முருகையன், சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் மணி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா்கள் மோகன், அனிபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீடாமங்கலம் சிஐடியு நிா்வாகிகள் தங்கபாண்டியன், ஜீவா, ஜெய்சங்கா் உளிளிட்டோா் பங்கேற்றனா்.