பேரளம் பேரூராட்சியின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து, மறியல் போராட்டம் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நன்னிலம் வட்டம் பேரளத்தில், அக்கட்சியின் நகரக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அருள் தலைமையில் நடைபெற்றது. இதில், பேரளத்தில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த தவறிய பேருராட்சியைக் கண்டித்தும் விரைவில் மறியல் போராட்டம் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா் தீன.கௌதமன், நகரச் செயலா் ஜி.செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.