திருவாரூர்

அதிமுகவில் நாளை உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

திருவாரூரில் அதிமுக மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை (செப்.26) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட அதிமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திருவாரூா் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மல்லிகா மஹாலில் நடைபெறுகிறது. இளைஞா்- இளம்பெண்கள் பாசறைச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பரமசிவம் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆா். காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறாா்.

புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் மற்றும் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நிா்வாகிகள், அணி பொறுப்பாளா்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT