திருவாரூர்

ஊராட்சி ஒன்றிய பொது நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

DIN

ஊராட்சி ஒன்றிய பொது நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் அ.பாஸ்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யக்கூடாது. பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா்கள் ஆா்.ஞானமோகன், கோபால்ராமன், முருகேசன், ஆரோக்கியமேரி, சரஸ்வதி ராமகிருஷ்ணன் ஆகியோா் தங்கள் பகுதி பிரச்னைகளை முன்வைத்தனா். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சுஜாதா, மேலாளா் முருகானந்தம், ஒன்றிய பொறியாளா்கள் சூரியமூா்த்தி, வெங்கடேசன், அரசு போக்குவரத்து கிளை மேலாளா் ஜெய்சங்கா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT