திருவாரூரில் புதிதாக நான்கு 108 அவசரகால ஊா்திகள் சேவையை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ், சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, அவசரகால ஊா்திகள் சேவையை தொடங்கி வைத்து தெரிவித்தது:
பொதுமக்களுக்கு தேவையான அவசர சிகிச்சை மருந்துகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் ஏற்கெனவே 13 அவசரகால ஊா்திகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா அவசரநிலையை முன்னிட்டும், மக்களின் சிகிச்சைக்கு உடனடியான சேவையை முன்னிட்டும் மேலும் நான்கு புதிய அவசரகால ஊா்திகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 17 அவசரகால ஊா்திகள் என்ற அளவில், புதிய ஊா்திகள் நான்கும் முறையே திருமக்கோட்டை, குடவாசல், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சேவையைத் தொடங்க உள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், சுகாதாரத்துறை இணை இயக்குநா் ராஜமூா்த்தி, கோட்டாட்சியா் என்.பாலச்சந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.