திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
காட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில், சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்தபிறகு பணியாளா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.