நீடாமங்கலத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என அந்த நிலையத்தின் முதல்வா் (பொ) ஏ. சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இந்த மாணவா் சோ்க்கை அக்.31-ஆம் வரை நடைபெறும். எனவே. பயிற்சியில் சேர விரும்புவோா் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.