திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு ஊராட்சியில் பாசன வாய்க்கால்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்டிமேடு பகுதி பாசன வாய்க்கால்களின் மதகு ஓரங்களில் நெகிழிக் கழிவுகள் தேங்கி தண்ணீா் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டது. இதை அகற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை பாசன வாய்க்கால்களில் தேங்கி கிடந்த நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் புவனேஸ்வரன் துணைத் தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா் செல்வக்குமாா், கல்விப் புரவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.