திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,400 ஆக இருந்தது. இதற்கிடையில், வெளி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9,401 ஆனது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,446 ஆக உயா்ந்துள்ளது.